Apr 23, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்
அரசியல்

குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ. 19-


நாட்டின் பிரதான நுழைவாயிலான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர்களின் உச்சக்கட்ட நேரத்தில் மனுவல் முறையில் கையாளப்படும் ஆல்பல முகப்பிடங்களில், போதுமான அதிகாரிகள் இருப்பது எல்லா நிலைகளிலும் உள்துறை அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மெனுவல் முறையிலான ஆள்பல முகப்பிடங்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் எல்லா முகப்பிடங்களிலும் அதிகாரிகள் அமர்ந்து இருப்பர். எந்தவொரு ஆள்பல முகப்பிடமும் காலியாக இருக்காது. ஒவ்வாரு வருகையாளரின் குடிநுழைவு அலுவல், கூடிய பட்சம் 25 நிமிடத்திற்குள் நிறைவு பெறும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

எனினும் ஜோகூர்பாரு பாலத்தில் உள்ள குடிநுழைவு கட்டடடத்தில் உச்சக்கட்ட நேரங்களில் குடிநுழைவு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததை அமைச்சர் மறுக்கவில்லை. இருந்த போதிலும் சில மணி நேரங்களில் மட்டுமே இது நிலவும். குறிப்பாக அதிகாரிகள் ஷிப்ட் முறை மாறும் நேரத்திலும், கழிப்பறைக்கு செல்லுதல் அல்லது தொழுகை க்கு செல்லும் பட்சத்தில் இது போன்ற சூழல் ஏற்படுவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர் ஒருவர், 25 நிமிடத்திற்குள் அலுவலை முடித்து விட்டு வெளியேறுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!