Oct 26, 2025
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்
அரசியல்

குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ. 19-


நாட்டின் பிரதான நுழைவாயிலான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர்களின் உச்சக்கட்ட நேரத்தில் மனுவல் முறையில் கையாளப்படும் ஆல்பல முகப்பிடங்களில், போதுமான அதிகாரிகள் இருப்பது எல்லா நிலைகளிலும் உள்துறை அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மெனுவல் முறையிலான ஆள்பல முகப்பிடங்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் எல்லா முகப்பிடங்களிலும் அதிகாரிகள் அமர்ந்து இருப்பர். எந்தவொரு ஆள்பல முகப்பிடமும் காலியாக இருக்காது. ஒவ்வாரு வருகையாளரின் குடிநுழைவு அலுவல், கூடிய பட்சம் 25 நிமிடத்திற்குள் நிறைவு பெறும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

எனினும் ஜோகூர்பாரு பாலத்தில் உள்ள குடிநுழைவு கட்டடடத்தில் உச்சக்கட்ட நேரங்களில் குடிநுழைவு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததை அமைச்சர் மறுக்கவில்லை. இருந்த போதிலும் சில மணி நேரங்களில் மட்டுமே இது நிலவும். குறிப்பாக அதிகாரிகள் ஷிப்ட் முறை மாறும் நேரத்திலும், கழிப்பறைக்கு செல்லுதல் அல்லது தொழுகை க்கு செல்லும் பட்சத்தில் இது போன்ற சூழல் ஏற்படுவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர் ஒருவர், 25 நிமிடத்திற்குள் அலுவலை முடித்து விட்டு வெளியேறுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று விளக்கினார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்