பிகேஅர் கட்சியின் துணைத் தலைவராக தாம் வீற்றிருந்த போது தமக்கு அடுத்து சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு அமிருடீன் ஷாரியை பரிந்துரை செய்தது, தாம் செய்த மிகப்பெரிய தவறாகும் என்று முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப்பெற்ற பின்னர் தாம் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை கைவிட நேர்ந்ததாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
தமக்கு அடுத்து சிலாங்கூர் மந்திரி புசாராக ஈஜோக் சட்டமன்ற உறுப்பின்ர் டாக்டர் இட்ரிஸ் அஹ்மாட்டை தேர்வு செய்வதற்கு பிகேஆர் தலைமைத்துவம் முன்மொழிந்தது. ஆனால், அப்பதவிக்கு அமிருடின் ஷாரியை தாம் முன்மொழிந்ததாக மலேசியா நவ் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான அஸ்மின் அலி தெரிவித்தார்.
மந்திரி பெசார் பதவிக்கு அமிருடின் ஷாரியை முன்மொழிந்ததற்காக தாம் இன்னமும் வருத்தப்படுவதாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


