Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நல்வாழ்விற்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 2 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு
அரசியல்

மக்களின் நல்வாழ்விற்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 2 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

Share:

சிரம்பான், டிச. 20-


மக்களின் நல்வாழ்விற்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வாயிலாக 2 லட்சம் ரிங்கிட்டை நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வசதி குறைந்த மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை உள்ளடக்கிய கூடைகளை வழங்கும் உணவு வங்கித் திட்டம் நேற்று முன்தினம் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

இந்த உணவுப்பொருள் கூடைகள் யாவும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 100 பேக்கெட் வீதம் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, சமையல் எண்ணெய், மாவு, பால் டின், தேதூள் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் ஒவ்வொரு பாக்கேட்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மத்திய அளவில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு வாயிலாகவும் இந்த உதவிித் திட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அரசாங்க ஏஜென்சி மற்றும் தனியார் துறை உட்பட வியூக தோழமை ஒத்துழைப்பு வாயிலாக உதவித் தேவைப்படக்கூடிய மக்களுக்கு உணவுக்கூடைகள் வழங்கப்படுவதாக வீரப்பன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் உணவு வங்கித் திட்டமானது, B40 தரப்பினர் உட்பட வசதி குறைந்தவர்களுக்கும், உதவித் தேவைக்கூடிய மக்களுக்கும் உதவும் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் வீரப்பன் தெளிவுபடுத்தினார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை