Jul 21, 2026
Thisaigal NewsYouTube
பண்பட்ட முறையில் பிரச்சாரம் செய்யுங்கள்: நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்
அரசியல்

பண்பட்ட முறையில் பிரச்சாரம் செய்யுங்கள்: நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

Share:

பண்பட்ட முறையில் பிரச்சாரம் செய்யுங்கள்: நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நாம் ஒரு பண்பட்ட மாநிலத்தில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் தேர்தல் விதிகளை மதித்து, நல்ல முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல்வாதிகளின் நடத்தைகளைத் தேர்தல் பிரச்சாரக் காலம் முழுவதும் பொதுமக்கள் கவனித்து சுயமதிப்பீடு செய்வார்கள் என்றும் அவர் லிங்கி தொகுதியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வலியுறுத்தினார்.

பிரச்சாரத்தின் இரண்டாம் நாளில் பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் செயல்பாட்டு அறைக்கு நாசவேலைகள் குறித்த புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அமினுடின் ஹரூண் இதனைத் தெரிவித்தார். குறிப்பாக, பாலோங் தொகுதியில் கட்சி கொடிகள் எரிக்கப்பட்டதும், செம்போங் தொகுதியில் கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெம்புல் பகுதியிலும் பிரச்சாரப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் உறுதிப்படுத்தியுள்ளார்

Related News