-பிரதமர் அன்வார் கோரிக்கை
மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விடுங்கள், இல்லையேல், விசாரணைக்கு தயாராகும்படி அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
மக்களின் பணத்தை அல்லது சொத்துக்களை தங்களின் வரவாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள், தாங்கள் களவாடியப் பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க தவறுவார்களேயானால் அவர்கள் அமலாக்கத் தரப்பினரின் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
இது தொடர்பாக தாம் மூன்று முறை வலியுறுத்திவிட்டதாகவும், இன்று கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் , இனி அமலாக்கத் தரப்பினரைதான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சந்திக்க நேரிடும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

அரசியல்
மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவீர் இல்லையேல் விசாரணைக்கு தயாராகுவீர்
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


