புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்ததன் மூலம், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சி தானாகவே வெளியேறிவிட்டதாக பாஸ் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
திரெங்கானுவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி அவாங், , வேறு கூட்டணி அமைக்கும் அல்லது இணையும் எந்தவொரு கட்சியும் கூட்டணியில் இருந்து தானாகவே நீக்கப்படும் என்பது பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் விதிமுறை என்றும், எனவே இதற்குத் தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு புத்ரா மற்றும் டாக்டர் ராமசாமியின் உரிமை போன்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு புதிய வலுவான கூட்டணியை அமைக்கப் போவதாக பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ஹாடி அவாங் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுட்ளளார்.








