Aug 27, 2026
Thisaigal NewsYouTube
12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 6 மாநிலங்களின் நடப்பு ஆட்சி நிலைநிறுத்தப்படும்
அரசியல்

12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 6 மாநிலங்களின் நடப்பு ஆட்சி நிலைநிறுத்தப்படும்

Share:

ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் 6 மாநிலங்களின் நடப்பு ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்று ஆகக்கடைசியான கருத்து கணிப்பு கூறுகிறது.

கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களின் ஆட்சியை பெரிக்காத்தான் நேஷனலும், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களின் ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணியும் நிலைநிறுத்திக்கொள்ளும் என்று தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதில் பிரசித்தி பெற்ற ஆய்வு நிறுவனமான நுசந்தாரா அகாடமி ஃபார் ரிசர்ச் கூறுகிறது.

அதேவேளையில் ஏற்கனவே கணிக்கப்பட்டதைப் போல 75 விழுக்காடு வரையில் வாக்காளர்கள் திரள்வார்கள் என்பது சந்தேகமாக இருந்தாலும் வாக்குப்பதிவின் எண்ணிக்கை 67 விழுக்காடாக குறையக்கூடும் என்று அது கணித்துள்ளது.

Related News