பினாங்கு மாநில ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை அக்கூட்டணி வென்றுள்ளது. டிஏபி தலைவர் லிம் குவான் எங் தமது ஆயேர் புத்தே தொகுதியை தற்காத்துக்கொண்டார். இதே போன்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும் தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பாரிசான் நேஷனலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது மூலம் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நான்காவது தவணையாக பினாங்கு மாநில ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


