பினாங்கு மாநில ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை அக்கூட்டணி வென்றுள்ளது. டிஏபி தலைவர் லிம் குவான் எங் தமது ஆயேர் புத்தே தொகுதியை தற்காத்துக்கொண்டார். இதே போன்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும் தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பாரிசான் நேஷனலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது மூலம் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நான்காவது தவணையாக பினாங்கு மாநில ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


