பினாங்கு மாநில ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை அக்கூட்டணி வென்றுள்ளது. டிஏபி தலைவர் லிம் குவான் எங் தமது ஆயேர் புத்தே தொகுதியை தற்காத்துக்கொண்டார். இதே போன்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும் தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பாரிசான் நேஷனலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது மூலம் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நான்காவது தவணையாக பினாங்கு மாநில ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


