பினாங்கு மாநில ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை அக்கூட்டணி வென்றுள்ளது. டிஏபி தலைவர் லிம் குவான் எங் தமது ஆயேர் புத்தே தொகுதியை தற்காத்துக்கொண்டார். இதே போன்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும் தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பாரிசான் நேஷனலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது மூலம் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நான்காவது தவணையாக பினாங்கு மாநில ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


