அம்னோவும் டிஏபி-யும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நிச்சயமாக, 16 வது பொதுத் தேர்தலின்போது அம்னோ காணாமல் போகும் என கெமாமான் இடைத் தேர்தல் முடிவை சுட்டிக் காட்டி பேசினார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்.
அம்னோவுக்கு ஆதரவு குறைகின்றது என்பதை கெமாமான் இடைத் தேர்தல் முடிவு காட்டி விட்டது. டிஏபி யுடன் கூட்டணி தொடர்ந்தால் அது அடுத்தப் பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.
மலாய் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் அம்னோ தொடர்ந்து உயிர்பெற்று நிலைத்திருக்க டிஏபியை விட்டு விலக வேண்டும் என்று மகாதீர் பரிந்துரைத்தார்.
கடந்தகாலத்தில் வறுமையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதில் அம்னோவின் பங்கு குறித்து இளம் வாக்காளர்களுக்கு தெரியாது என்றார்.
பழைய தலைவர்களை நீக்க வேண்டும். மலாய்க்காரர்களின் பிரச்சனைகளுக்காக, அவர்களின் ஏழ்மை குறித்து மீண்டும் போராட வேண்டும் என அம்னோவின் முன்னாள் தலைவரான மகாதீர் கூறினார்.








