Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது
அரசியல்

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

Share:

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, கோலாலம்பூரிலுள்ள வணிக வளாகம் ஒன்றின் முன் நடைபெற்ற பேரணி தொடர்பாக, சர்ச்சைக்குரிய சமய போதகர் சம்ரி வினோத் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் நீதிபதி ஃபைசாநூர் ஹசன் முன்பு குற்றச்சாட்டானது வாசிக்கப்படவுள்ளது.

இத்தகவலை சம்ரி வினோத்-இன் வழக்கறிஞர் ஹனிப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, இப்பேரணி தொடர்பான விசாரணை, தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக முந்தைய தகவல்கள் கூறின.

இந்நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தையோ அல்லது பீதியையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அறிக்கைகள் வெளியிட்டது தொடர்பாக, தண்டனைச் சட்டம் பிரிவு 505(b)-இன் கீழ் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யுமாறு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு