Oct 21, 2025
Thisaigal NewsYouTube
உரிமைக் கட்சியின் பதிவு மீதான மேல்முறையீடு தள்ளுபடி
அரசியல்

உரிமைக் கட்சியின் பதிவு மீதான மேல்முறையீடு தள்ளுபடி

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.14-

தனது தலைமையில் அமைக்கப்பட்ட உரிமைக் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயிலிடம் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் தலைவர் டாக்டர் P. இராமசாமி தெரிவித்துள்ளார்.

உரிமைக் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தாங்கள் செய்து கொண்ட விண்ணப்பம், கடந்த ஆண்டு ஜுலை 4 ஆம் தேதி சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS- ஸினால் தள்ளுபடி செய்யப்பட்டதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

ROS-ஸின் இந்த முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சர் என்ற முறையில் சைபுஃனிடம் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பதாக டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!