நாட்டில் கனரக வாகன ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், முன்னாள் இராணுவ வீரர்களுக்காக அரசாங்கம் சிறப்பு உரிமம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இராணுவத்தில் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவமுள்ள ஓய்வு பெற்ற வீரர்கள், தங்களிடம் உள்ள இராணுவ உரிமத்தை Class E உரிமமாக மாற்றிக் கொள்ள இந்த திட்டம் உதவும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
மேலும், 40 வயதுகளில் உள்ள பல முன்னாள் வீரர்கள், இன்னும் உடல் ஆரோக்கியத்துடனும் திறமையுடனும் உள்ளதால், அவர்கள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டுவதில் திறம்பட செயல்பட முடியும் என அவர் கூறினார்.
இந்த முயற்சி மூலம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








