இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரங்களைச் சமாளிப்பதற்கு நடப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது உட்பட அதற்காக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கம் நாளை மறுநாள் ஜுன் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
3 ஆர் விவகாரங்களை வேண்டுமென்றே பேசி வரும் தரப்பினரைச் சமாளிப்பதற்கு இந்த பேச்சுவார்த்தை அவசியமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஆசிய அனைத்துலக நடுவர் மையத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம், நிபுணத்துவ அமைப்புகள், அமலாக்கப்பிரிவினர்,சமூக சிவில் அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அசாலினா தெரிவித்தார்.
நடப்பில் உள்ள 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் போன்றவற்றை மறுமதிப்பீடு செய்வது, இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


