Dec 22, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அஸாலினா
அரசியல்

வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அஸாலினா

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரங்களைச் சமாளிப்பதற்கு நடப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது உட்பட அதற்காக பு​திய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கம் நாளை மறுநாள் ஜுன் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

3 ஆர் விவகாரங்களை வேண்டுமென்றே பேசி வரும் தரப்பினரைச் சமாளிப்பதற்கு இந்த பேச்சுவார்த்தை அவசியமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஆசிய அனைத்துலக நடுவர் மையத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம், நிபுணத்துவ அமைப்புகள், அமலாக்கப்பிரிவின​ர்,ச​மூக சிவில் அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அசாலினா தெரிவித்தார்.

நடப்பில் உள்ள 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்​லூடகச் சட்டம் போன்றவற்றை மறுமதிப்பீடு செய்வது, இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு