அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் டத்தோ செரி அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்ற இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் மிகச்சிறந்த அடைவு நிலையை அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டாளர்ளை கொண்டு வருவதில் அமிருடின் ஷாரி வெற்றி கண்டுள்ளார் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அமிருடின் மீண்டும் மந்திரி பெசராக நியமிக்கப்படும் தகவலை கேட்டு அவரே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக சிலாங்கூர், செகின்ச்சானில்னில் மடானி விவசாய நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


