அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் டத்தோ செரி அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்ற இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் மிகச்சிறந்த அடைவு நிலையை அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டாளர்ளை கொண்டு வருவதில் அமிருடின் ஷாரி வெற்றி கண்டுள்ளார் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அமிருடின் மீண்டும் மந்திரி பெசராக நியமிக்கப்படும் தகவலை கேட்டு அவரே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக சிலாங்கூர், செகின்ச்சானில்னில் மடானி விவசாய நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


