Aug 11, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது
அரசியல்

சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களின் நிலை குறித்து அக்கறைக் கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது என்று பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், சிங்கப்பூரில் உள்ள எங்கள் சமூகமான மலாய்க்கார்களின் நிலை குறித்து ஒரு முஸ்லிம் என்ற முறையில் அக்கறை கொள்ள எங்களுக்கு முழு உரிமையிருக்கிறது என்று முகமட் சுக்ரி ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் இறையாண்மை மற்றும் சட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். ஆனால், ஒரு முஸ்லீம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகி விட முடியாது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் செயலில் பாஸ் கட்சியின் இரண்டு தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் முகமட் சுக்ரி ஓமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது