Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது
அரசியல்

சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களின் நிலை குறித்து அக்கறைக் கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது என்று பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், சிங்கப்பூரில் உள்ள எங்கள் சமூகமான மலாய்க்கார்களின் நிலை குறித்து ஒரு முஸ்லிம் என்ற முறையில் அக்கறை கொள்ள எங்களுக்கு முழு உரிமையிருக்கிறது என்று முகமட் சுக்ரி ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் இறையாண்மை மற்றும் சட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். ஆனால், ஒரு முஸ்லீம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகி விட முடியாது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் செயலில் பாஸ் கட்சியின் இரண்டு தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் முகமட் சுக்ரி ஓமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!