Dec 16, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களை முட்டாளாக்கும் தந்திரம்
அரசியல்

மலாய்க்காரர்களை முட்டாளாக்கும் தந்திரம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒரு பெரிய குடையின் கீழ் பாதுகாப்பதற்கு செயலகத் திட்டத்தை அறிவித்து இருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் செயலானது, மலாய்க்கார்களை முட்டாளாக்கும் தந்திரமாகும் என்று அமானா கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் நஷ்ருடின் நஹாருடின் வர்ணித்துள்ளார்.

மலாய்க்காரர்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி, அவர்களை அதள பாதாளத்தில் தள்ளுவதற்குதான் துன் மகாதீர் வியூகம் வகுக்கிறார் என்று டாக்டர் நஷ்ருடின் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீரின் பெரிய குடைத் திட்டம், சுதந்தரத்திற்கு முன்பு மலாய்க்காரர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அந்த இருளடைந்த பாதைக்குத் திரும்பக் கொண்டுச் செல்வதற்கே வித்திடும், நடைமுறைக்கு சரிபட்டு வராது என்று அவர் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் அரசியல் அணுகுமுறை, அவர்களை முட்டாளாக்கும் முயற்சியாகும். கூட்டு விவேகத்தன்மையில் ஆரோக்கியமான போட்டா போட்டிக்கு வழிவிடாமல் மலாய்க்காரர்களை முடக்கி விடும் என்று டாக்டர் நஷ்ருடின் எச்சரித்தார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!