Mar 3, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியிலிருந்து விலகும் திட்டத்தை எவோன் பெனெடிக் அவசரமாகச் செயல்படுத்தி விட்டார்
அரசியல்

அமைச்சர் பதவியிலிருந்து விலகும் திட்டத்தை எவோன் பெனெடிக் அவசரமாகச் செயல்படுத்தி விட்டார்

Share:

தாவாவ், நவம்பர்.10-

தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவிலிருந்து விலகும் திட்டத்தை டத்தோ எவோன் பெனெடிக் முன்கூட்டியே கோடி காட்டி, அவசரமாகச் செயல்பட்டு விட்டார் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சபா மாநிலத்தின் 40 விழுக்காட்டு வருவாய் உரிமை குறித்து கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யவில்லை. இவ்விவகாரம் இன்னமும் ஆய்வில் உள்ளது என்று பிரதமர் விளக்கினார்.

சபா மாநிலத்தின் உரிமை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமானால், அமைச்சர் பதவியிலிருந்து எவோன் பெனெடிக் பதவி விலக வேண்டும் என்று தாம் தலைமையேற்றுள்ள UPKO கட்சி எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிலிருந்து விலகுவதற்கு அந்த சபா அரசியல்வாதி முடிவெடுத்தார்.

சபா மாநிலத்தின் தன்னாட்சி உரிமை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்ததன் எதிரொலி, UPKO கட்சி இந்த முடிவை எடுத்தது.

Related News

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குத் தடை: வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த இனி அனுமதி இல்லை - டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு

தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குத் தடை: வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த இனி அனுமதி இல்லை - டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு