Jul 29, 2026
Thisaigal NewsYouTube
லிங்கி தொகுதி: இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு சாதகமான சூழல்
அரசியல்

லிங்கி தொகுதி: இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு சாதகமான சூழல்

Share:

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் , தனது நிர்வாகத் திறன் மற்றும் மாநில அரசின் சிறப்பான செயல்பாடுகளை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமினுடின் ஹரூண் தனது தற்போதைய பாதுகாப்பான சிகாமத் தொகுதியை விடுத்து, லிங்கி தொகுதியில் போட்டியிட எடுத்த முடிவு அவரது அரசியல் துணிச்சலைக் காட்டுகிறது. இத்தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டி அவருக்கு சாதகமான ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பளாராக அமினுடின் ஹரூண், பாரிசான் நேஷனல் வேட்பாளராக டத்தோ முகமது பைசல் ராம்லி மற்றும் பெர்சத்து கட்சியின் வேட்பாளராக டத்தோ ஜாம்ரி முகமது சைட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பெர்சத்து கட்சியின் வேட்பாளர் டத்தோ ஜாம்ரி முகமது சைட், களத்தில் இருப்பதால், அவர் மலாய் வாக்குகளைப் பிரிப்பார் என்றும், இது இடைக்கால மந்திரி பெசாரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், இத்தொகுதியில் உள்ள சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவதுடன், குறிப்பிடத்தக்க அளவு மலாய் வாக்குகளையும் தன் வசம் ஈர்த்தால், இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் லிங்கி தொகுதியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

Related News

சிரம்பான் ஜெயாவில் வெற்றி பெற்றால் 'மக்கள் தகவல் சேவை மையம்' - வேட்பாளர் எஸ். முகுந்தன் உறுதி

சிரம்பான் ஜெயாவில் வெற்றி பெற்றால் 'மக்கள் தகவல் சேவை மையம்' - வேட்பாளர் எஸ். முகுந்தன் உறுதி

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க  வேண்டும்

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு