Mar 6, 2026
Thisaigal NewsYouTube
குறுக்கு வழிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
அரசியல்

குறுக்கு வழிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

Share:

டிச. 22-

விளையாட்டு எதுவாக இருந்தாலும், நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கையூட்டு அல்லது குறுக்கு வழிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ கூறுகையில், விளையாட்டு வெற்றியை கண்ணியத்துடனும் நேர்மையுடனும் அடைய வேண்டும், அப்போதுதான் அடையப்படும் வெற்றியைப் பெருமையாகவும் மரியாதையாகவும் கருத முடியும் என்றார்.

பேட்மிண்டன் வீரர்கள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, அனைத்து விளையாட்டுகளும் ஊழல் நடவடிக்கைகளில் இருந்தும் போட்டி ஒழுங்குமுறையிலிருந்தும் விடுபடுவதை உறுதி செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மகளிர் கால்பந்து லீக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய மலேசிய கால்பந்து சங்கத்திற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். மேலும், மகளிர் அணிகள் மேம்பட கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்றும், தேசிய மைதானத்தை பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

எட்டு அணிகள் பங்கேற்ற மகளிர் கால்பந்து லீக் போட்டியில் Kelana United FC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சபா , சிலாங்கூர் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தன.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை