பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பிறை தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் இராமாசாமிக்கு பக்கபலமாக இருந்து வந்தவரான செபராங் பிறை நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினரான டேவிட் மார்ஷல், தாம் 15 ஆண்டு காலமாக இருந்து வந்த டிஏபி யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டிஏபி சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜு போட்டியிடுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சிவசுந்தரம் ராஜலிங்கம் போட்டியிடும் அதேவேளையில் முடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


