பினாங்கு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு டிஏபி வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்று அதன் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் டிஏபியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வேட்பாளர்கள் பட்டியலிருந்து விடுபடும் அதேவேளையில் புதிய முகங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டிஏபி இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தம்முடைய இந்த அறிவிப்பு, நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தியை தரலாம். ஆனால், இது தவிர்க்க முடியாததாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தவணைக் காலமாக பினாங்கை தற்காத்து வரும் டிஏபி, நான்காவது தவணையாக பினாங்கை தற்காக்க முனைந்துள்ளது. மாநிலத்தை தற்காக்கும் இந்த முயற்சியில் டிஏபி என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ அவற்றை செய்தாக வேண்டியள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாத பினாங்கு மாநில நடப்பு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


