Jun 14, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு
அரசியல்

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சியானது குறைந்தது 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே இன்று அறிவித்துள்ளார்.

இரு மாநிலத் தேர்தல்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகளும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பந்தாய் செலாமாட் பேரங்காடி கிளை திறப்பு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளையில், பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த ஜசெக கட்சியானது ஜோகூரில் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் என உறுதிப்படுத்தியிருந்தது.

மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை, பக்காத்தான் கூட்டணியானது அனைத்து 36 தொகுதிகளிலும் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில், தொகுதி பங்கீட்டின் படி, பிகேஆர் 16 தொகுதிகளிலும், ஜசெக 11 தொகுதிகளிலும், அமானா 9 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இரு மாநிலங்களிலும் பக்காத்தான் கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிக... | Thisaigal News