Jun 11, 2026
Thisaigal NewsYouTube
மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து
அரசியல்

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் எண்டாவ் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நம்பிக்கையில் பெர்சாத்து கட்சி உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

தற்போதைய எண்டாவ் சட்டமன்ற உறுப்பினர் அல்வியா தாலிப், பெர்சாத்து கட்சியை விட்டு விலகி, மீண்டும் அம்னோவில் இணைந்த போதிலும், மெர்சிங் பகுதியில், பெர்சாத்து தொடர்ந்து வலுவான மக்கள் ஆதரவை கொண்டிருப்பதாக, நேற்று இரவு நடைபெற்ற ஜோகூர் தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது, அஸ்மின் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்ட போதிலும், மெர்சிங் இன்னும் பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளதாக அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

அஸ்மினின் இந்தக் கருத்தானது, அல்வியா தாலிப் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெர்சாத்து கட்சியிலிருந்து விலகி மீண்டும் அம்னோவில் இணைந்ததைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

Related News