மலேசியர்களை பிளவுப்படுத்தும் இனவாத சக்திகளிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறைகூவல் விடுத்துள்ளார். அமைதி, நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகியவையே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதனை சீர்குலைத்து, அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கொண்ட ஒரு நாட்டை குழப்பமான சூழலுக்கு வித்திட்டு, இனவெறியைத் தூண்டிவரும் சக்திகளுக்கு ஓர் அங்குலம்கூட இடம் அளிக்கப்படாது. அதனை அரசாங்கம் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை, அவால் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை வலியுறுத்தினார். புனித மாதமான அவால் முஹர்ரம் இஸ்லாமியப் புதுவருடத்தை வரவேற்பதிலும், நமது குடியேற்றம் உண்மையானதாகவும்,நேர்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்யவும் இந்த புனித நன்நாளில் மனவுறுதி கொள்வோம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தீமையிலிருந்து நன்மைக்கு, ஊழலிலிருந்து தூய்மைக்கு, இனவாதத்திலிருந்து சுதந்திரமான இதயத்திற்கு, குறுகிய மனப்பான்மையிலிருந்து திறந்த மனதிற்கு நம்மை இடப்பெயர்ச்சி செய்து கொள்வதற்கு "ஹிஜ்ரத்" வழிவகுக்கும் என்று பிரதமர் தமது அவால் முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

அரசியல்
இனவாத சக்திகளுக்கு ஓர் அங்குலம்கூட இடம் அளிக்கப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
