மலேசியர்களை பிளவுப்படுத்தும் இனவாத சக்திகளிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறைகூவல் விடுத்துள்ளார். அமைதி, நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகியவையே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதனை சீர்குலைத்து, அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கொண்ட ஒரு நாட்டை குழப்பமான சூழலுக்கு வித்திட்டு, இனவெறியைத் தூண்டிவரும் சக்திகளுக்கு ஓர் அங்குலம்கூட இடம் அளிக்கப்படாது. அதனை அரசாங்கம் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை, அவால் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை வலியுறுத்தினார். புனித மாதமான அவால் முஹர்ரம் இஸ்லாமியப் புதுவருடத்தை வரவேற்பதிலும், நமது குடியேற்றம் உண்மையானதாகவும்,நேர்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்யவும் இந்த புனித நன்நாளில் மனவுறுதி கொள்வோம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தீமையிலிருந்து நன்மைக்கு, ஊழலிலிருந்து தூய்மைக்கு, இனவாதத்திலிருந்து சுதந்திரமான இதயத்திற்கு, குறுகிய மனப்பான்மையிலிருந்து திறந்த மனதிற்கு நம்மை இடப்பெயர்ச்சி செய்து கொள்வதற்கு "ஹிஜ்ரத்" வழிவகுக்கும் என்று பிரதமர் தமது அவால் முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

அரசியல்
இனவாத சக்திகளுக்கு ஓர் அங்குலம்கூட இடம் அளிக்கப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


