Mar 5, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி எல்லை மறுசீரமைப்புக்கு ஆளும், எதிர்க்கட்சி தரப்பு உடன்பட வேண்டும்!
அரசியல்

தொகுதி எல்லை மறுசீரமைப்புக்கு ஆளும், எதிர்க்கட்சி தரப்பு உடன்பட வேண்டும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24-

நாட்டில் தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பை மேற்கொள்வதற்கான அணுகுமுறையில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே இணக்கம் காணப்பட வேண்டும் என பெரிக்காதான் நசியனால்-லைச் சேர்ந்த இந்திரா மக்கொத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் அப்துல்லா வலியுறுத்தினார்.

நடப்பிலுள்ள தொகுதி எல்லை வரையறை, குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உள்ளதாக கூறிய அவர், அக்கட்சியின் பெயரை குறிப்பிடவில்லை.

தொகுதி எல்லை சீரமைப்பு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு, பல்லின மக்கள், உள்ளூர் மக்களின் தொகை உள்ளிட்ட விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு செய்தது போல, மலாய்க்காரர்களின் ஆதிக்கமிக்க தொகுதிகள் அல்லது கலப்பு தொகுதிகளாக வேண்டுமென்றே உருவாக்க கூடாது. குறிப்பாக, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சீரற்ற நிலை நிலவியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்புக்கான விதிமுறை, கூட்டரசு அரசியலைமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படுமாயின் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் BERSIH ஏற்பாடு செய்திருந்த நேற்றைய கருத்தரங்கில் சைப்புடின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்