பெரிக்காத்தான் நேஷனலில் இந்திய சமூகத்தின் சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவராக அதன் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தலைமையேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக்கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனலில் இடம் பெற்றுள்ள வேளையில் அந்த கூட்டணியில் இந்திய சமூகத்தின் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு ஹம்ஸா சைனுடின் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹம்ஸா சைனுடின் தலைமையில் முதலாவது சிறப்புப்கூட்டம் கடந்த ஜுலை 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மஇகாவிலிருந்து வெளியேறியுள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பி. புனிதன், அந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் பெரிக்காத்தான்நேஷனலில் உச்சமன்றக்ட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பின்னர் இந்திய சிறப்பு நடவடிக்கை குழு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


