Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு குற்றச்சாட்டு: டுவான் இப்ராஹிமுக்கு 48 மணி நேர கெடு விதித்த அன்வார்
அரசியல்

அவதூறு குற்றச்சாட்டு: டுவான் இப்ராஹிமுக்கு 48 மணி நேர கெடு விதித்த அன்வார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் லிம் ஹுய் யிங் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோரி அந்தக் கருத்துகளைத் திரும்பப் பெறுமாறு அன்வார் தரப்பில் இருந்து சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், துவான் இப்ராஹிம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அன்வாரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி, பகாங் மாநிலம் பெல்டா ஜெந்தராக் உத்தாரா, கோலா கிராவ்வில் நடைபெற்ற பாஸ் அரசியல் கூட்டத்தில், நெகிரி செம்பிலான் அரச குடும்பம் மற்றும் போலீஸ் விசாரணைகளில் பிரதமர் அன்வார் தலையிட்டதாக துவான் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியதாக சட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவான் இப்ராஹிமின் அந்த உரையின் சில பகுதிகள், அடுத்த நாளே அவரது முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களை விமர்சிப்பவர்கள் விரைவில் போலீஸ் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்று துவான் இப்ராஹிம் தமது உரையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "நிதி முறைகேடு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்" குறித்து அவர் பேசிய கருத்துகள், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது ஆட்சியைக் குறிக்கும் வகையில் பொதுமக்களால் புரிந்துகொள்ளப்படலாம் என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

எனினும், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அன்வார் மறுத்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்தவர்களை விசாரிக்க போலீசாருக்குத் தாம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரங்களில் ஒருபோதும் தலையிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், துவான் இப்ராஹிம் தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும், நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்றும் அன்வார் கோரியுள்ளார்.

மேலும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைக்கமாட்டேன் என்று அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இழப்பீடும், வழக்குச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன.

இதனிடயே, துவான் இப்ராஹிம் முன்வைத்த ஊழல், நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி கூறப்பட்டுள்ளதாக அன்வாரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்துள்ளார்.

Related News

தாபூங் ஹாஜி ஆர்.சி.ஐ அறிக்கை வெளியீடு தேர்தல் உத்தி அல்ல – ஃபஹ்மி பாசில் விளக்கம்

தாபூங் ஹாஜி ஆர்.சி.ஐ அறிக்கை வெளியீடு தேர்தல் உத்தி அல்ல – ஃபஹ்மி பாசில் விளக்கம்

இறுதி நேர அவதூறுகளை நம்பாதீர்க்ள்":  நூருல் இசா அன்வார் உருக்கமான வேண்டுகோள்

இறுதி நேர அவதூறுகளை நம்பாதீர்க்ள்": நூருல் இசா அன்வார் உருக்கமான வேண்டுகோள்

ஊழலற்ற, நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்": அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வேண்டுகோள்

ஊழலற்ற, நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்": அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வேண்டுகோள்

"மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள்": யுனேஸ்வரன் ராமராஜ் முழக்கம்!

"மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள்": யுனேஸ்வரன் ராமராஜ் முழக்கம்!

பதவிகள் நிரந்தரமல்ல, காலம் மாறும்": அரண்மனை முடிவை ஏற்கிறேன் - ராயிஸ் யாத்திம்

பதவிகள் நிரந்தரமல்ல, காலம் மாறும்": அரண்மனை முடிவை ஏற்கிறேன் - ராயிஸ் யாத்திம்

தாபோங் ஹாஜி சீரமைப்பு: 75 விழுக்காடு ஆர்சிஐ பரிந்துரைகளை நிறைவேற்றிய நிர்வாகத்திற்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு

தாபோங் ஹாஜி சீரமைப்பு: 75 விழுக்காடு ஆர்சிஐ பரிந்துரைகளை நிறைவேற்றிய நிர்வாகத்திற்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு