டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் தனது சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்களை வரும் புதன்கிழமை அறிவிக்கவிருக்கிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளர்களை களம் இறக்குகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடானில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று பெரிக்கத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக் கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ செரி முஹமாட் அஸ்மின் அலி அறிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
