டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் தனது சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்களை வரும் புதன்கிழமை அறிவிக்கவிருக்கிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளர்களை களம் இறக்குகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடானில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று பெரிக்கத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக் கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ செரி முஹமாட் அஸ்மின் அலி அறிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


