சிலாங்கூர் மாநிலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தை தாங்கள் நான்காவது முறையாக கைப்பற்ற முடியும் என்று 70 முதல் 80 விழுக்காடு நம்பிக்கை பிறந்துள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றியை உறுதி செய்வதற்கு மலாய்க்கார வாக்காளர்களும் பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கணித்ததைத் போல சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 40 முதல் 41 தொகுதிகள் வரையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கைப்பற்றும் என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக காலை 8.24 மணியளவில் தமது மனைவி டத்தின் செரி மஸ்தியானா முஹமட் டின் மோட்டார் சைக்கிளில் வந்த அமிருடின் ஷாரி, சுங்கை துவாவில், செலாயாங் பாரு சீனப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

அரசியல்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் சிலாங்கூரை தற்காத்துக் கொள்ள முடியும் - அமிருடின் ஷாரி நம்பிக்கை
Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


