Apr 23, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 1,700 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பள முறை : அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்
அரசியல்

சிலாங்கூரில் 1,700 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பள முறை : அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்

Share:

ஷா ஆலாம், நவ. 21-


சிலாங்கூர் மாநிலத்தில் 1,700 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று மாநில மனித வள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு அறிவித்துள்ளார்.

1,700 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை, மத்திய அரசாங்கம் அளவில் அமல்படுத்தப்படும் முறைக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தின் அமலாக்கமும் அமைந்து இருக்கும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய குறைந்த பட்ச சம்பள முறை அமல்படுத்தப்பட்டதும், அந்த நடைமுறையை முதலாளிமார்கள் அனுசரிப்பதை உறுதி செய்வதற்கு ஆள்பல இலாகாவின் ஒத்துழைப்புடன் சட்ட அமலாக்க நடவடிக்கையின் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கும் அணுகு முறையை சிலாங்கூர் அரசு கடைப்பிடிக்கும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

குறைந்த பட்ச சம்பள முறைக்கு அப்பாற்பட்ட நிலையில் சிறு,குறு, நடுத்தர தொழில்துறையினருக்கும் உதவும் வகையில் சிலாங்கூர் அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்பதையும் பாப்பாராய்டு தெரிவித்தார்..

தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள முறையை அமல்படுத்துதை உறுதி செய்வதற்கு அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் சிலாங்கூர் அரசு தனது ஆதவை வழங்கி வரும் என்று இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பாப்பாராய்டு இதனை குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!