மேற்காசியப் போர் நீடிப்பதால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, மலேசிய அரசின் எரிபொருள் மானியச் சுமையை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு, போக்குவரத்து, காப்பீட்டுக் கட்டணங்கள் ஆகியன அதிகரிப்பதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மலேசியாவால் இந்தச் சூழலைச் சமாளிக்க முடியும் என்றாலும், விலை உயர்வு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் விரிவான உத்திகள் தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார்.

அரசியல்
மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்
Related News

கோலாலம்பூர் சிறு வணிகர்களுக்கு நற்செய்தி - கடை வாடகையில் 50 விழுக்காடு தள்ளுபடி

இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி

பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்


