மேற்காசியப் போர் நீடிப்பதால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, மலேசிய அரசின் எரிபொருள் மானியச் சுமையை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு, போக்குவரத்து, காப்பீட்டுக் கட்டணங்கள் ஆகியன அதிகரிப்பதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மலேசியாவால் இந்தச் சூழலைச் சமாளிக்க முடியும் என்றாலும், விலை உயர்வு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் விரிவான உத்திகள் தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார்.

அரசியல்
மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்
Related News

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்


