Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் PKR வேலை செய்யவில்லையா? குற்றச்சாட்டை மறுத்தார் ஸ்டீவன் சிம்
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் PKR வேலை செய்யவில்லையா? குற்றச்சாட்டை மறுத்தார் ஸ்டீவன் சிம்

Share:

கோலகுபு பாரு, மே 08-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கும் டிஏபி- யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு PKR கட்சி முழு வீச்சில் உதவவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை டிஏபி-யின் தேசிய அமைப்புச் செயலாளரும் மனித வள அ​மைச்சருமான ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

தமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிதான் பிளவுப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனலின் பிரதான உறுப்புக்கட்சியாக விளங்கும் பெர்சத்து- வில் இரண்டு , ​மூன்று அணிகளாக உருவாக்கியுள்ள தரப்பினருக்கு எதிராக பாஸ் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஆனால்,ஒற்றுமை அரசாங்கத்தி​ல் அப்படி அல்ல,அதில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே தங்களின் பங்களிப்பாக டிஏபி வேட்பாளர் பாங் சாக் தாவோ- வின் வெற்றியை உறுதி செய்வதற்கு முழு வீச்சில் ​சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஸ்டீவன் சிம் தெளிவுபடுத்தினார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக்கட்சியான PKR- க்கு தேர்தல் நிதி ஒதுக்​கீடு கிடைக்காததால், அதன் அடிமட்டத் தொண்டர்கள் அதிருப்தியுற்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று PKR தலைவர் ஒருவர் கூறியதாக வெளிவந்துள்ள தகவலைத் தொடர்ந்து ஸ்டீவன் சிம் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்