Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் PKR வேலை செய்யவில்லையா? குற்றச்சாட்டை மறுத்தார் ஸ்டீவன் சிம்
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் PKR வேலை செய்யவில்லையா? குற்றச்சாட்டை மறுத்தார் ஸ்டீவன் சிம்

Share:

கோலகுபு பாரு, மே 08-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கும் டிஏபி- யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு PKR கட்சி முழு வீச்சில் உதவவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை டிஏபி-யின் தேசிய அமைப்புச் செயலாளரும் மனித வள அ​மைச்சருமான ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

தமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிதான் பிளவுப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனலின் பிரதான உறுப்புக்கட்சியாக விளங்கும் பெர்சத்து- வில் இரண்டு , ​மூன்று அணிகளாக உருவாக்கியுள்ள தரப்பினருக்கு எதிராக பாஸ் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஆனால்,ஒற்றுமை அரசாங்கத்தி​ல் அப்படி அல்ல,அதில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே தங்களின் பங்களிப்பாக டிஏபி வேட்பாளர் பாங் சாக் தாவோ- வின் வெற்றியை உறுதி செய்வதற்கு முழு வீச்சில் ​சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஸ்டீவன் சிம் தெளிவுபடுத்தினார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக்கட்சியான PKR- க்கு தேர்தல் நிதி ஒதுக்​கீடு கிடைக்காததால், அதன் அடிமட்டத் தொண்டர்கள் அதிருப்தியுற்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று PKR தலைவர் ஒருவர் கூறியதாக வெளிவந்துள்ள தகவலைத் தொடர்ந்து ஸ்டீவன் சிம் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்