கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் இருந்ததைத் போல இந்த முறை சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய கோட்டை அல்ல என்று சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசாரும், மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டத்தோ செரி மொஹமாட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பக்காத்தான் ஹராப்பானுக்கா? அல்லது பெரிக்காத்தான் நேஷனலுக்காக என்று துல்லியமாக கணிக்க முடியாத அளவிற்கு இந்த முறை சிலாங்கூர் மாநில தேர்தல் கடுமையாக அமைந்துள்ளதாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்டம் கண்டுள்ளது என்பதுதான் நடப்பு உண்மை. சிலாங்கூரை ஊடுருவ முடியும் என்ற புதிய நம்பிக்கை, இந்த முறை பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு துளிர் விட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தை முன்னெடுத்த அம்னோ ஜாம்பான்கள் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் இருப்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக உலு கிள்ளான் சட்டமன்ற்த தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லியிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


