கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் இருந்ததைத் போல இந்த முறை சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய கோட்டை அல்ல என்று சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசாரும், மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டத்தோ செரி மொஹமாட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பக்காத்தான் ஹராப்பானுக்கா? அல்லது பெரிக்காத்தான் நேஷனலுக்காக என்று துல்லியமாக கணிக்க முடியாத அளவிற்கு இந்த முறை சிலாங்கூர் மாநில தேர்தல் கடுமையாக அமைந்துள்ளதாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்டம் கண்டுள்ளது என்பதுதான் நடப்பு உண்மை. சிலாங்கூரை ஊடுருவ முடியும் என்ற புதிய நம்பிக்கை, இந்த முறை பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு துளிர் விட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தை முன்னெடுத்த அம்னோ ஜாம்பான்கள் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் இருப்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக உலு கிள்ளான் சட்டமன்ற்த தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லியிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


