Mar 6, 2026
Thisaigal NewsYouTube
இஸ்கந்தர்  குட்டி வழக்கு சர்ச்சையின் மத்தியில்  துன் மகாதீர் IJN- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
அரசியல்

இஸ்கந்தர் குட்டி வழக்கு சர்ச்சையின் மத்தியில் துன் மகாதீர் IJN- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-

தாம், இந்தியா, கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் / தாம் ஓர் உண்மையான மலாய்க்கார முஸ்லிம் அல்லாதவரைப் போன்றும் / ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, மலாய்க்காரர்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழக்கச் செய்து விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, கோலாலம்பூர் IJN மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலரது கவன ஈர்ப்பாக அமைந்துள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக துன் மகாதீர் தொடுத்துள்ள இந்த மானநஷ்ட வழக்கு தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 99 துன் மகாதீர் திடீரென்று சுகவீனப்பட்டுள்ள நிலையில் அவரின் நுரையீரலில் கிருமித் தொற்று பரவியிருப்பதாக கூறி, கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

துன் மகாதீர், தீவிர சிகிச்சைப்பெறும் பொட்டு 12 நாட்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கிஞர் மியோர் நோர் டைதிர் சுஹைமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துன் மகாதீர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை