Apr 23, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு எந்த மையத்திலும் தேர்வு எழுதலாம்
அரசியல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு எந்த மையத்திலும் தேர்வு எழுதலாம்

Share:

கோத்தாபாரு, நவ. 30-


வெள்ளத்தால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. எம். தேர்வு எழுதும் மாணவர்கள், மாற்று எஸ். பி. எம் தேர்வு மையங்களில் தேர்வுக்கு அமரலாம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாணவரும் தேர்வைத் தவறவிடுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் உட்பட அனைவருக்கும் திட்டமிட்டப்படி தேர்வு தொடரும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவுவது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு, நாளை மறுநாள் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து இரண்டு ஆயிரத்து 956 மாணவர்கள் எழுதுகின்றனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!