Mar 7, 2026
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் வெள்ளம் : 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
அரசியல்

6 மாநிலங்களில் வெள்ளம் : 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Share:

கோலாலம்பூர், நவ. 28-


ஆறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ், ஜோகூர் மற்றும் பேரா ஆகிய ஆறு மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பேரிடரில் 9 ஆயிரத்து 223 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 582 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளந்தான் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 157 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.32 மணி வரை கிடைக்கப்பெற்ற நிலவரப்படி, ஆறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 385 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை, ஆகக்கடைசி நிலவரப்படி 37 ஆயிரத்து 189 பேராக அதிகரித்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதிலும், அவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்லுவதிலும், உரிய உதவிகளை வழங்குவதிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு மூச்சாக பாடுபட்டு வரும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தேசிய பேரிடர் நிர்வாக மையமான நட்மா ஆகியவற்றுக்கு பிரதமர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு