Jan 2, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் கூட்டணியில் பெர்சாத்து இன்னும் உறுதியாக உள்ளது: முகைதீன்
அரசியல்

பெரிக்காத்தான் கூட்டணியில் பெர்சாத்து இன்னும் உறுதியாக உள்ளது: முகைதீன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.02-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகி விட்டாலும் கூட, பெர்சாத்து கட்சியானது அக்கூட்டணியில் கொள்கை ரீதியான, விசுவாசமான பங்காளியாக இருப்பதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இந்த ஒத்துழைப்பானது, கூட்டணியைத் தொடர்ந்து வலுவான நிலையில் வைத்திருப்பதோடு, எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் என்றும் முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தாண்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான குழப்பங்கள் நீங்கி, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இருக்கும் குழப்பமான சூழ்நிலையானது, கூட்டணியின் பலவீனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள முகைதீன், இந்த தலைமைத்துவ மாற்றம் ஒற்றுமைக்கான அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக முகைதீன் யாசின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பெரிக்காத்தான்  கூட்டணிக்கு பாஸ் கட்சியே தலைமை ஏற்கும்: விரைவில் தகுதி வாய்ந்த் தலைவர் தேர்வு - ஹாடி அவாங் உறுதி

பெரிக்காத்தான் கூட்டணிக்கு பாஸ் கட்சியே தலைமை ஏற்கும்: விரைவில் தகுதி வாய்ந்த் தலைவர் தேர்வு - ஹாடி அவாங் உறுதி

பாஸ் கட்சியின் முடிவானது பெர்லிஸ் அரச மாளிகைக்கு எதிரானது அல்ல

பாஸ் கட்சியின் முடிவானது பெர்லிஸ் அரச மாளிகைக்கு எதிரானது அல்ல

பாஸ் கட்சிக்கு வழிவிடவே முகைதீன் பதவி விலகினார்: அனுவார் மூசா தகவல்

பாஸ் கட்சிக்கு வழிவிடவே முகைதீன் பதவி விலகினார்: அனுவார் மூசா தகவல்

பெர்லிசில் ஐவர் கொண்ட ஆட்சிக் குழுவை அமைக்கிறார் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார்

பெர்லிசில் ஐவர் கொண்ட ஆட்சிக் குழுவை அமைக்கிறார் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார்

ஒற்றுமை அரசாங்கத்தில் சதி வேலைகளோ, துரோகங்களோ நடப்பதில்லை - அன்வார் நம்பிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தில் சதி வேலைகளோ, துரோகங்களோ நடப்பதில்லை - அன்வார் நம்பிக்கை

உச்சக்கட்ட நெருக்கடியில் பெரிகாத்தான்: ஜோகூர், பேராக், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர்கள் பதவி விலகினர்

உச்சக்கட்ட நெருக்கடியில் பெரிகாத்தான்: ஜோகூர், பேராக், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர்கள் பதவி விலகினர்