கோலாலம்பூர், மே.31-
பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் கிடையாது என்பதால் அவர் கூட்டணியின் சார்பில் தேவையற்ற அறிவிப்புகள் விடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பெம்பான் சட்டமன்ற உறுப்பினர் Dr Yadzil Yaakub தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நேற்று நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முஹிடின், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அனைத்து 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், Ikatan Prihatin Rakyat கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் கூறியிருந்தார்.
அது குறித்து இன்று கருத்துத் தெரிவித்துள்ள Dr Yadzil, அந்த வகையான அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் முஹிடினுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட Dr Yadzil, வரவிருக்கும் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நியமனக் கடிதங்களில் கையெழுத்திடப் போவது முஹிடின் அல்ல என்றும் நினைவூட்டியுள்ளார்.
இந்த விவகாரம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குள் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








