ஆவண மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாட்டின் தேசிய யால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 பாரம்பரிய வீரர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் முறையான சட்ட நடைமுறைகளின்படியே அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
2026 தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் , "முதலில் மலேசிய கால்பந்து சங்கமான எஃப் ஏ எம் இது குறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின்னரே இந்த விவகாரம் உள்துறை அமைச்சின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.
முன்னதாக, போலி ஆவணங்கள் மூலம் தகுதி பெற்றதாகக் கூறி கேப்ரியல் பால்மெரோ, ஃபகுண்டோ கார்சஸ் உள்ளிட்ட 7 வீரர்களுக்கு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான பிஃபா, 12 மாதங்கள் தடை விதித்தது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், கடந்த மார்ச் மாதம் இந்தத் தடை உறுதி செய்யப்பட்டது.








