Jul 18, 2026
Thisaigal NewsYouTube
இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்
அரசியல்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

Share:

இனவாத அரசியல் மூலம் மக்களைப் பிரிக்க நினைப்பவர்களை வாக்காளர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ஒருவர் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு விடுத்திருக்கும் கோரிக்கை, நாட்டின் எதிர்காலத்திற்கு எதிரானது என கார்த்தியாயினி கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசியல்வாதிகள் தங்களின் திட்டங்களும், தீர்வுகளும் தீர்ந்து போகும் போதே இத்தகைய இனவாத அட்டையைத் கையில் எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியிருந்தால், நாட்டின் எதிர்காலம் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். தலைவர்களை அவர்களின் நேர்மை, தகுதி மற்றும் சேவை மனப்பான்மையைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டுமே தவிர, இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல என்று கார்த்தியாயினி குறிப்பிட்டார்.

வாழ்க்கைச் செலவினக் குறைப்பு, சிறந்த கல்வி, தரமான வேலைவாய்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை குறித்தே நமது தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும். இனவாத அரசியலை முழுமையாக நிராகரித்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கார்த்தியாயின் வலியுறுத்தினார்.

Related News

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு