பாரிசான் நேஷனலின் ஓர் உறுப்புக்கட்சி என்றுகூட பாராமல் அம்னோவினால் தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் புகார் அளிக்க மஇகா முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்பில் நாளை மறுநாள் புதன்கிழமை பிரதமர் அன்வாருடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒரு சந்திப்பில் அம்னோவிற்கு எதிராக புகார் அளிக்க மஇகா நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மஇகாவை அம்னோ அறவே மதிக்கவில்லை என்றும், ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் இதனால் கட்சி தலைமைத்துவம் அம்னோவிற்கு எதிராக மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாக முக்கியத் தலைவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மஇகாவை ஒரு செல்லாக்காசைப் போல் அம்னோ கருதியதால் ஆறு மாநிலங்களுக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கட்சி முடிவெடுத்துள்ளதாக அந்த முக்கியத் தலைவர் கூறிகிறார். இதன் தொடர்பில் வரும் புதன்கிழமை பிரதமர் அன்வாருடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு மஇகா ஏற்பாடு செய்துள்ளதாக எவ்.எம்.தி கூறுகிறது.
இந்த சந்திப்பில் பிரதமரிடம் தனது உள்ளக் குமுறல்களை மஇகா கொட்டவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


