Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் முடிந்தவுடன் ஆட்சியாளர்களை சந்திப்பேன்
அரசியல்

தேர்தல் முடிந்தவுடன் ஆட்சியாளர்களை சந்திப்பேன்

Share:

இன மற்றும் மதத் துவேஷங்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இத்தகையச் செயல்கள் இறுதியில் நாட்டின் நல்லிணக்கத்தைச் சிதைத்து விடும் என்று நினைவுறுத்தினார். கோம்பாக்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்திய அன்வார், மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன் தாம் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாகக் கூறினார்.

பிரிவினைப் போக்கை கடைபிடிக்கும் தரப்பினர் தொடர்பான விவகாரங்களை கையாளுவதற்கான மேலும் ஆக்ககரமான வழிவகைகளை ஆராய்வதற்கு இச்சந்திப்பை தாம் நடத்தவுள்ளதாக அவர் சொன்னார். நான் மாமன்னருடனும் சிலாங்கூர் சுல்தானுடனும் சந்திப்பு நடத்தியுள்ளேன். அது அரசியல் தொடர்பான சந்திப்பு அல்ல. நீங்கள் யாரை அல்லது எந்த கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்று எனக்கு கவலையில்லை. நீங்கள் சமயத்தின் மீது சவாரி செய்தால் உரிய நடவடிக்கைக்கு ஆளாகுவீர்கள் என்று சுமார் 4 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் எச்சரித்தார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி