Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார், கெடா மாநிலத்திற்கு எதிரானவரா?
அரசியல்

பிரதமர் அன்வார், கெடா மாநிலத்திற்கு எதிரானவரா?

Share:

கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவர் என்று கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவராக இருந்திருந்தால் அந்த மாநிலத்திற்கு கூடுதல் முத​லீட்டை எவ்வாறு கொண்டு வந்திருக்க முடியும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். கெடா மாநிலத்தில் குலின் ஹை-டெக் பார்க் பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கு மட்டும் 2,500 கோடி வெள்ளிக்கும் கூடுதலாக முத​லீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்கா​ட்டினார்.

நெற்களஞ்சியத்திற்கு பிரசித்திப்பெற்ற மாநிலமான கெடா, பொருளியல் திட்டத்தின் பங்கு கொள்ளும் மாநில மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தாம் எவ்வாறு கெடா மாநிலத்திற்கு எதிரானவராக இருக்க முடியும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் வினவினார்.

நேற்று ​வெள்ளிக்கிழமை கெடா, பாலிங்கில் குபாங் என்ற இடத்தில் கெடா மாநில ஒற்றுமை மடானி திட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு