Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார், கெடா மாநிலத்திற்கு எதிரானவரா?
அரசியல்

பிரதமர் அன்வார், கெடா மாநிலத்திற்கு எதிரானவரா?

Share:

கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவர் என்று கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவராக இருந்திருந்தால் அந்த மாநிலத்திற்கு கூடுதல் முத​லீட்டை எவ்வாறு கொண்டு வந்திருக்க முடியும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். கெடா மாநிலத்தில் குலின் ஹை-டெக் பார்க் பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கு மட்டும் 2,500 கோடி வெள்ளிக்கும் கூடுதலாக முத​லீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்கா​ட்டினார்.

நெற்களஞ்சியத்திற்கு பிரசித்திப்பெற்ற மாநிலமான கெடா, பொருளியல் திட்டத்தின் பங்கு கொள்ளும் மாநில மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தாம் எவ்வாறு கெடா மாநிலத்திற்கு எதிரானவராக இருக்க முடியும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் வினவினார்.

நேற்று ​வெள்ளிக்கிழமை கெடா, பாலிங்கில் குபாங் என்ற இடத்தில் கெடா மாநில ஒற்றுமை மடானி திட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு