Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் நடவடிக்கை அறையை திறந்தார் அரிச்சந்திரன்
அரசியல்

தேர்தல் நடவடிக்கை அறையை திறந்தார் அரிச்சந்திரன்

Share:

கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் ஒரு சுயேட்சை வேட்பாளரான சி. அரிச்சந்திரன், வாக்காளர்களை சந்திக்கவும், அவர்களின் பிரச்னைகளை கேட்டறியவும் தமது தேர்தல் நடவடிக்கை அறையை திறந்துள்ளார்.

லூனாஸ் வட்டாரத்தில் ஒரு பகுதியான பாயா பெசார் ரில் தமது தேர்தல் நடவடிக்கை அறையை அரிச்சந்திரன் திறந்துள்ளார். இத்திறப்பு விழா, நேற்று மாலையில் பாயா பெசார், ஶ்ரீ லிமாவ் கடை வரிசையில் ஆதரவாளர்களின் அமோக வரவேற்புடன் நடைபெற்றது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், ஒரு தூய்மையான தேர்தலை காணவிரும்பும் அதேவேளையில் லூனாஸ் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டும் என்ற தமது நீண்ட கால லட்சியத்திற்கு இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் நல்லதொரு களம் அமைத்துக்கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொகுதி மக்களுக்கும் தமக்கும் ஓர் இணைப்பு பாலமாக இருக்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய கவனத்தை செலுத்தவும்,தேர்தல் தொடர்புடைய தமது செயல் நடவடிக்கை குறித்து தொகுதி மக்கள் அறிந்து கொள்ளவும் இந்த தேர்தல் நடவடிக்கை அறை பெரும் துணையாக இருக்கும் என்று அரிச்சந்திரன் குறிப்பிட்டார்.

சாவி சின்னத்தில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளரான அரிச்சந்திரன், தேர்தல் நடவடிக்கை அறையை திறந்து இருப்பது, மக்கள் மீது அவர் கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்று தொகுதி வாக்காளர்கள் தெரிவித்தனர்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்