Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு தேர்தல் பரப்புரையில் அன்வார் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம்!
அரசியல்

கோல குபு பாரு தேர்தல் பரப்புரையில் அன்வார் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம்!

Share:

சிலாங்கூர், மே 02-

இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோவை ஆதரித்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போது வேண்டுமானாலும், தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடலாம். இதை PKR கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் கோடி காட்டியுள்ளார்.

இதற்கு முன்பு, அத்தொகுதியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரியுடன் பிரதமர் பங்கேற்றுள்ளார்.

அத்தொகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தையும் பிரதமர் தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாக கூறிய அவர், அந்த திறந்த இல்ல உபசரிப்பு எப்போது நடத்தப்பட்டது என்பதை விவரிக்கவில்லை.

முன்னதாக, இடைத்தேர்தல்களுக்கான பரப்புரைகளில் நாட்டின் பிரதமர் கலந்துக்கொள்ளும் பாரம்பரியம் இல்லாததால், கோல குபு பாருவுக்கு அன்வார் வருகைப் புரிய மாட்டார் என்பதை தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி ஃபட்சில் மறைமுகமாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்