Jun 26, 2026
Thisaigal NewsYouTube
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் நூருல் இஸ்ஸா
அரசியல்

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் நூருல் இஸ்ஸா

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.16-

மே மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார் பினாங்கு, பெர்மாதாங் பாவோ தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இஸ்ஸா அன்வார். பிகேஆர் தலைவரின் மகளான இவர், இந்த முடிவை இன்று அறிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் நூருல் இஸ்ஸா கூறினார். கட்சி உறுப்பினர்கள் தனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று நம்புவதாகவும், இந்த முறை தேர்தலில் குடும்ப உறவுடன் போட்டி நடக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இதுவரை மூன்று துணைத் தலைவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். 2022 தேர்தலில் நூருல் இஸ்ஸா போட்டியிடவில்லை. பின்னர் அவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News