செரம்பான் பகுதியில் நடைபெற்ற பிகேஆர் கூட்டத்தில் பேசிய பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டி ஸின், நாட்டின் எதிர்கால நலனுக்காக மக்கள் இனவாத மற்றும் மத அரசியலை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் போது தலைவர்களின் திறமை மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொள்ளாமல், வெறும் இனவாத மற்றும் மத உணர்ச்சிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பது நாட்டுக்கு ஆபத்தானது என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், குறுகிய அரசியல் லாபத்துக்காகச் சில தரப்பினர் இனவாத மற்றும் மத அரசியலை மீண்டும் முன்னெடுத்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








