6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அக்கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நன்னெறி பண்புகளை மீறி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 வேட்புமனுத்தாக்கல் மையங்களுக்கு இன்று காலையில் வருகை தந்த பிரதமர், நடப்பு சூழ்நிலையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. ஒரு வேட்பாளர் என்ற முறையில் நிர்ணியக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நன்னெறி பண்புகளை மீறிவிடாமல் மிக ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


