6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அக்கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நன்னெறி பண்புகளை மீறி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 வேட்புமனுத்தாக்கல் மையங்களுக்கு இன்று காலையில் வருகை தந்த பிரதமர், நடப்பு சூழ்நிலையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. ஒரு வேட்பாளர் என்ற முறையில் நிர்ணியக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நன்னெறி பண்புகளை மீறிவிடாமல் மிக ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


