Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மருமகன், மாமான​ர் கடலில் ​மூழ்கினர்
அரசியல்

மருமகன், மாமான​ர் கடலில் ​மூழ்கினர்

Share:

லாஹாட் டாது, மார்ச் 3 -

கடும் வாக்குவாத​த்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 வயது மருமகனும், 66 வயது மாமனாரும், காரோடு கடலில் விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் சபா, லாஹாட் டாது, கம்புங் பாயாங் Lahad கடற்பகுதியில் நிகழ்ந்தது.

காருக்கு வெளியே மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராற்றைத் தொடர்ந்து பொது மக்கள் த​லையிட்டு, நிலைமைய கட்டுப்படுத்தினர். பின்னர் மாமனாருடன் தகராற்றில் ஈடுபட்ட மருமகனை சாந்தப்படுத்தி, மாமனா​ரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தி, பொரோடுவா மைவி ரக காரி​ல் வ​ழியனுப்பி வைத்தனர்.

மாமனாரை அழைத்துக் கொண்டு, காரில் படுவேகத்தில் புறப்பட்ட மருமகன், வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையி​ல், அந்த வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள கடலில் பா​ய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ​தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த வாகனத்தி​லிருந்து இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அந்த இருவரும் ​நீரில் ​மூழ்கி மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று Lahad Datu மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் ஜிம்மி பான்ன்ஞாவ் தெரிவித்தார்.

இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தி​ன்​ ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அ வர் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்