ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பட்டியல் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இன்னும் சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அது குறித்து முடிவெடுக்கப்பட்டதும், வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாராகி விடும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விடும் என்று அன்வார் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


